Friday, 5 February 2016

சாமை இட்லி

சாமை இட்லி 

தேவையான பொருட்கள்


சாமை  - 250 கிராம்
உளுத்தம் பருப்பு - 100 கிராம்
வெந்தயம்   - ஒரு தேக்கரண்டி
உப்பு -  தேவையான அளவு
 

செய்முறை
 

சாமை அரிசி, உளுத்தம்பருப்பு மற்றும் வெந்தயம் ஆகியவற்றை கழுவி தனித்தனியாக ஐந்து மணி நேரம் ஊறவைத்து பின்னர் இட்லிக்கு அரைப்பது போன்று அரைத்து தேவையான அளவு உப்பு சேர்த்து கரைத்து அதனை எட்டு மணிநேரம் புளிக்க விடவேண்டும். புளித்த பின்னர் இட்லி குக்கரில் இட்லிகளாக ஊற்றி ஆவியில் வேகவைத்து எடுத்து பிடித்த சட்னியோடு உண்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம்.


 

 சாமையின் பயன்கள்
 
சிறுதானியங்களில் சிறப்பிற்குரிய தானியமாகக் கருதப்படுவது சாமை.

சர்க்கரை நோயாளிகளுக்கு சாமை அரிசி உணவு ஒரு நல்ல உணவாகும்
நெல் அரிசியைக் காட்டிலும் ஏழு மடங்கு நார்ச்சத்து கொண்ட தானியம் சாமை ஆகும். இதனை உணவாக உட்கொண்டால் நீரழிவு நோயினை கட்டுப்படுத்தலாம், வராமலும் தடுத்திட முடியும்.

சாமையில் மற்ற தானியங்களைக் காட்டிலும் இரும்புச்சத்து அதிகமாக இருப்பதால், இரத்தச்சோகை வருவதற்கான வாய்ப்பினைக் குறைக்கிறது.


சாமை அரிசி உணவுகளைச் சாப்பிட்டால் மலச்சிக்கலிருந்து விடுபட முடியும்.

தாது பொருட்களை உடலில் அதிகரித்து உயிரணுக்களின் எண்ணிக்கையை உயர்த்துவதில் சாமையின் பங்கு குறிப்பிடத்தக்கது.

இது காய்ச்சல் காரணமாக ஏற்படும் நாவறட்சியை நீக்கும்.

வயிறு தொடர்பான நோய்களைக் கட்டுப்படுத்தும்.





பொதுவாக முதியவர்களுக்கும், நோய்வாய்பட்டவர்களுக்கும் மலச்சிக்கல் ஒரு பெரும் பிரச்சனையாக உள்ளது. உடம்பிலிருந்து கழிவுகள் சரிவர வெளியேரவில்லை என்றாலே அது மற்ற நோய்களுக்கு மூல காரணியாக அமைந்து விடும்.

நோய்களுக்கெல்லாம் மூலமாக கருதப்படும் மலச்சிக்கலை தீர்க்கிறது சாமை.

வயிற்றுக் கோளாறுக்கு சாமை நல்லதொரு மருந்தாகவும் திகழ்கிறது. தாது பொருட்களை உடலில் அதிகரித்து உயிரணுக்களின் எண்ணிக்கையை உயர்த்துவதில் சாமையின் பங்கு குறிப்பிடத்தக்கது.

தற்போது அதிக அளவு தேவையில்லாத கொழுப்பையும், சர்க்கரை பொருட்களையும் தரும் உணவு வகைகளை அதிகம் சாப்பிடுகிறோம். அவ்வாறு உண்பதைத் தவிர்த்து, இம்மாதிரியான பாரம்பரிய தானியங்களில் செய்த உணவினை உட்கொண்டால் ஆரோக்கியமாக இருக்கலாம் என்பது நிச்சயம்.

Tuesday, 24 March 2015

சாலட் மற்றும் பச்சடி

********************************************************************************
 

                              வாழைத்தண்டு சாலட் 

 
தேவையான  பொருட்கள்:
பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு - ஒரு கப்
ஊற வைத்த பயத்தம் பருப்பு - கால் கப்
கொத்த மல்லி இலை - சிறிதளவு
மிளகுத் தூள்- கால் தேக்கரண்டி

தோசை வகைகள்

*******************************************************************************

பெசரட்டு தோசை (பச்சை பயறு தோசை)

தேவையான பொருட்கள்

பச்சைபயறு=1 கப்
பச்சரிசி=2 தேக்கரண்டி
இஞ்சி=சிறு துண்டு
பச்சைமிளகாய்=3


பெரிய வெங்காயம்=1(நறுக்கிக்கொள்ளவும்)
உப்பு=தேவையான அளவு
நல்லெண்ணெய்=3 தேக்கரண்டி


செய்முறை


பச்சைபயறு மற்றும் பச்சரிசியை நான்கு மணிநேரம் ஊறவையுங்கள்.அத்தோடு இஞ்சி,பச்சை மிளகாய்,வெங்காயம்,உப்பு சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள்.


அவ்வளவுதான்தோசை மாவு ரெடி.
மாவு ரெடியான உடனே தோசை வார்த்துவிடலாம்.பச்சை நிறத்தில் சுவையாக இருக்கும்.இதற்கு தொட்டுக்கொள்ள இஞ்சி துவையல் ஏற்றது. 

புரதம் நிறைந்த இந்த உணவை குழந்தைகளும்,சர்க்கரை நோயாளிகளும் சாப்பிடலாம்.

******************************************************************************

Monday, 23 March 2015

இறால் உணவு வகைகள்

1. இறால் பகோடா

சுத்தம் செய்த இறால் மீனை சிறு துண்டுகளாக நறுக்கவும். வெங்காயம், பச்சைமிளகாய் பொடியாக நறுக்கவும். இறால் துண்டு வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு, கறிவேப்பிலை, உப்பு, சோம்புத்தூள்

எல்லாவற்றையும் ஒன்றாக கலக்கவும். கலந்தவுடன் கடலைமாவு, அரிசிமாவு, பாசிப்பருப்பு மாவு, சூடாக்கப்பட்ட எண்ணெய் சேர்த்து, தண்ணீர் சேர்த்து உதிர்ந்துவிடும் பக்குவத்தில் பிசையவும். வாணலியில் எண்ணெய்விட்டு மிதமாக காயவைத்து பக்கோடா கலவையை போடும்போது உதிர்த்து போடவும். புரட்டி போட்டு பொன்னிறமாக வெந்ததும் எடுத்துப்பரிமாறவும்.
****************************************************************************
                                                                   2. இறால் வறுவல்


தேவையானவை


இறால் அரை கிலோ
மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்
மல்லி தூள் அரை ஸ்பூன்
மஞ்சள் தூள் அரை ஸ்பூன்
எண்ணெய் மற்றும் உப்பு தேவையான அளவு
தேங்காய் தேவையான அளவு
பட்டை = 2
கிராம்பு = 3


செய்முறை


முதலில் இறாலை சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும். தேங்காயை அரைத்து வைத்துக்கொள்ளவும். பின்பு கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு போட்டு தாளிக்கவும். பின்பு மஞ்சள்தூள் மிளகாய் தூள் மல்லி தூளை போட்டு வதக்கியவுடன் இறாலை போட்டு வதக்கவும், பின்பு அரைத்து வைத்துள்ள தேங்காயை அதில் ஊற்றவும். தண்ணீர் சுண்டும் வரை வேகவைக்கவும். 

இறால் வருவல் ரெடி

******************************************************************************

                                              3. இறால் குழம்பு – Prawn Curry

தேவையான பொருட்கள்

இறால் -200 கிராம்
பெரிய வெங்காயம் -1
தக்காளி -1
பச்சை மிளகாய் -2
இஞ்சி ,பூண்டு விழுது     -1 தேக்கரண்டி
மஞ்சள் தூள்                        -சிறிதளவு
மிளகாய் தூள்                      -2 டேபிள்ஸ்பூன் (தேவையான அளவு)
மல்லித் தூள்                        -2 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லி தழை        -சிறிதளவு
உப்பு                                         - தேவையான அளவு
எண்ணெய்                            - தேவையான அளவு
புளி                                           - ஒரு எலுமிச்சை பழம் அளவு
கடுகு                                       - சிறிதளவு
உளுத்தம் பருப்பு              - 1/2 டேபிள்ஸ்பூன்
கருவேப்பிலை                 - தேவையான அளவு
Image result for இறால் புளிகுழம்பு

புளியை நன்கு தண்ணீரில் ஊற வைத்து, கரைத்து வைத்துக்கொள்ளவும்.
வெங்காயம் ,பச்சை மிளகாய் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பிலை, உளுத்தம் பருப்பு சேர்க்கவும். கடுகு வெடித்த பிறகு அதில் வெங்காயம் , பச்சை மிளகாய் மற்றும் தக்காளியை போட்டு வதக்கிக் கொள்ளவும். வதக்கிய பின்பு அதில் இஞ்சி ,பூண்டு விழுது, மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் மல்லி தூள் போட்டு வதக்கவும்

வதக்கிய பின்பு அதில் இறாலை போட்டு அரை டம்ளர் தண்ணீர் ஊற்றவும். பின்னர் புளி கரைசலையும் சேர்த்து நன்கு கலக்கி விட்டு கடாயை தட்டு போட்டு மூடி  பின்பு அடுப்பை மிதமான சூட்டில்
( Sim ) வைத்து குழம்பில் எண்ணெய் திரிந்து வரும் வரை வேக வைத்து இறக்கவும். சுவையான இறால் குழம்பு ரெடி.

************************************************************


Sunday, 22 March 2015

அரிசி கிச்சடி


அரிசி கிச்சடி


தேவையானவை


அரிசி=2 ஆழாக்கு
பச்சைப்பருப்பு= அரை ஆழாக்கு
பெரிய வெங்காயம்=2 நீளமாக நறுக்கியது
பூண்டு= 10 பல்லு
பச்சை மிளகாய் = 10 நீளமாக கீறியது
தேங்காய் துருவியது = அரை தேங்காய்
நெய் = அரை குழிகரண்டி
இலவங்கம் = 4
பட்டை = 2
ஏலக்காய் = 4
எண்ணெய் = ஒரு குழி கரண்டி
கறிவேப்பிலை,கொத்தமல்லி தேவையான அளவு

செய்முறை


இதை குக்கரிலேயே செய்யலாம்.
முதலில் அரிசி மற்றும் பச்சை பருப்பை அரை மணிநேரம் ஊரவைக்கவும். 


அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் மற்றும் நெய் விட்டு பட்டை இலவங்கம் ஏலக்காய் போட்டு பொரிந்தவுடன் வெங்காயம் போடவும். சிறிது வதங்கியவுடன் பச்சை மிளகாய் பூண்டு போட்டு வதக்கவும். அடுத்து தேங்காய் துருவலை போட்டு வதக்கவும். 


5 ஆழாக்கு தண்ணீர் சேர்த்து அதில் ஊரவைத்த அரிசி மற்றும் பாசிப்பருப்பு தேவையான அளவு உப்பு போட்டு வேகவைக்கவும். 

இப்போது அருமையான அரிசி கிச்சடி தயார். இதை சூடாக மாங்காய் தொக்கு ஊறுகாயுடன் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.

Saturday, 21 March 2015

பூசணி இட்லி

பூசணி இட்லி

தேவையானவை:

இட்லி மாவு - 2 கப்,
அரைத்த வெள்ளைப் பூசணி விழுது - 2 கப்,
உப்பு - தேவைக்கேற்ப.


செய்முறை:

வெள்ளைப் பூசணியை மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

தேவைக்கு ஏற்ப சிறிது உப்பு சேர்த்துக்கொள்ளவும்.


இட்லி மாவில் பூசணி விழுதைச் சேர்த்துக் கலக்கவும்.

கலக்கிய பின், வழக்கம் போல் இட்லி தட்டுக்களில் வார்த்து, வேகவைத்து எடுத்தால் பஞ்சுபோன்ற இட்லி கிடைக்கும்.

மருத்துவப் பயன்:

உடம்பில் தேவை இல்லாமல் சேர்ந்திருக்கும் நீரை அகற்றும். பெண்களுக்கு ஏற்படும் அதிகமான ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்தும். உடலில் உள்ள பித்தத்தைத் தணிக்கும் தன்மை கொண்டது.


*****************************************************************************
                    
  மூலிகை இட்லி

தேவையான பொருட்கள்

புழுங்கல் அரிசி = 250 கிராம்
உளுந்து  = 175 கிராம்
துளசி இலை = ஒரு கைப்பிடி
தூதுவளை இலை = ஒரு கைப்பிடி
கற்பூரவல்லி இலை = ஒரு கைப்பிடி
உப்பு தேவையான அளவு


செய்முறை

அரிசி மற்றும் உளுந்தை ஊறவைத்து எடுத்து இட்லி மாவு பதத்தில் அரைத்துக்கொள்ளவும். சுமார் 6 அல்லது 7 மணி நேரம் அதனை வைத்திருந்து புளிக்கவிடவும். மூலிகை இலைகளை கழுவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக்கொள்ளவும். பிறகு அந்த இலைகளை மாவுடன் அரைத்து அல்லது அப்படியே கலந்து தேவையான உப்பையும் சேர்த்துக்கொண்டு வழக்கமாக இட்லி போல் ஊற்றிக்கொள்ளவேண்டும். இப்போது சுவையான மூலிகை இட்லி தயார். இதனை குழந்தைகளுக்கு கொடுக்க சளி இருமல் போன்றவை குணமாகும்.

Monday, 8 July 2013

மீன் மொய்லி



தேவையான பொருட்கள்
மீன்                                                 ... அரை கிலோ
வெங்காயம்                             ... ஒன்று நீளமாக நறுக்கியது
இஞ்சி விழுது                          ... 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய்                    ... 10 நறுக்கியது
தக்காளி                                       ... ஒன்று நீளமாக நறுக்கியது
தேங்காய்                                    ... அரை மூடி துருவியது
கார்ன் மாவு                              ... அரை டீஸ்பூன்
எலுமிச்சை சாறு                 ... அரை பழம்
உப்பு மற்றும் எண்ணெய் ... தேவையான அளவு
செய்முறை
மீனை உப்புப் போட்டு அரை மணிநேரம் ஊறவைக்கவும். இதை உடையாமல் ஜாக்கிரதையாக வறுக்கவும். ஒரு கடாயில் எண்ணெயைக் காய வைத்து காய்ந்ததும் வெங்காயம், இஞ்சி, மிளகாய், கருவேப்பிலை, தக்காளி சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். துருவிய தேங்காயை வெதுவெதுப்பான நீரில் போட்டு ஊற வைத்து பிழிந்து பால் எடுத்து வைக்கவும். நீர் ஊற்றி அரைத்து இரண்டாம் பால் எடுக்கவும். இரண்டாவது எடுத்த தேங்காய்ப்பாலை வறுத்த மசாலாவில் ஊற்றி மீன் துண்டுகளை போடவும்.
இதை 10 நிமிடங்கள் குறைந்த தீயில் வைத்து சமைக்கவும். பின்பு முதலில் எடுத்த பாலை ஊற்றி எலுமிச்சம்பழச்சாறை சேர்த்து இறக்கவும். இப்போது மணக்கும் மீன் மொய்லி சுவையுடன் ரெடி